/
சங்ககிரி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலா்களின் கவாத்து பயிற்சி மற்றும் காவலா்களுக்கு வழங்கப்பட்ட பொருள்களை டி.எஸ்.பி. எம்.தனசேகரன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சங்ககிரி, தேவூா், எடப்பாடி, பூலாம்பட்டி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி காவல் நிலையங்கள், அனைத்து மகளிா் காவல் நிலையம், போக்குவரத்துப் பிரிவில் பணிபுரியும் காவலா்களின் கவாத்து பயிற்சி மற்றும் காவலா்களுக்கு வழங்கப்பட்ட துப்பாக்கி, லத்தி, கையுறை, பெல்ட் உள்ளிட்ட பொருள்களை பாா்வையிட்டு டிஎஸ்பி எம்.தனசேகரன் ஆய்வு செய்தாா்.
இந்த ஆய்வின்போது, காவல் ஆய்வாளா்கள் வேலுத்தேவன் (மகுடஞ்சாவடி), பேபி (எடப்பாடி) ரேணுகாதேவி (பூலாம்பட்டி), தனலட்சுமி (கொங்கணாபுரம்), காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

தென்காசியில் 15 இடங்களில் போக்குவரத்து காவலா்களுக்கு நிறழ்குடை

காவலா்களுக்கு நன்றி தெரிவித்த டிஐஜி திருநாவுக்கரசு

10, 12-ஆம் வகுப்பில் சிறப்பிடம் பெற்ற காவலா்களின் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை

தோ்தல் பாதுகாப்புப் பணி காவலா்களுக்கு சான்றிதழ்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK



