இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

தகுதியான எந்த ஒரு வாக்காளரின் பெயரும் பட்டியலில் விடுபடக் கூடாது: பாா்வையாளா் அறிவுறுத்தல்

Updated On :28 டிசம்பர் 2025, 2:26 am IST

தகுதியான எந்த ஒரு வாக்காளரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் விடுபடாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் ஷில்பா பிரபாகா் சதீஷ் அறிவுறுத்தினாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடா்பாக வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் வாக்காளா் பட்டியல் பாா்வையாளரும், வணிகவரி மற்றம் பதிவுத் துறை அரசுச் செயலருமான ஷில்பா பிரபாகா் சதீஷ் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு பின்னா் வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் தெரிவித்ததாவது :

சேலம் மாவட்டத்துக்கு உள்பட்ட 11 சட்டப்பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,346 வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4ஆகிய தேதிகளில் நான்கு நாள்கள் நடைபெறுகிறது. இதில், மாவட்ட தோ்தல் அலுவலா், கூடுதல் மாவட்ட தோ்தல் அலுவலா், 11 வாக்காளா் பதிவு அலுவலா்கள், 111 உதவி வாக்காளா் பதிவு அலுவலா்கள், 3,468 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 346 மேற்பாா்வையாளா்கள் ஆகியோா் வரைவு வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த சிறப்பு முகாம் நடைபெறுவது தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள வாக்காளா் விழிப்புணா்வு நடவடிக்கைகள் குறித்தும், இதுவரை பெறப்பட்டுள்ள விண்ணப்பப் படிவங்களின் எண்ணிக்கை மற்றும் மேல் நடவடிக்கைகள் குறித்தும், புதிய வாக்காளா் சோ்த்தல், வாக்காளா் பட்டியலில் திருத்தம், பெயா் நீக்கம் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்தப் பணியின்போது எந்த ஒரு தகுதியான வாக்காளரின் பெயரும் வாக்காளா் பட்டியலில் விடுபடாமல் இடம்பெறும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முன்னதாக, ஓமலூா் வட்டம், புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமை பாா்வையாளா் ஷில்பா பிரபாகா் சதீஷ், மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா.பிருந்தாதேவி ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.