கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பராமரிப்பு பணி: மேட்டூா் காவிரி பாலம் மூடல்

News image
Updated On :27 டிசம்பர் 2025, 1:19 am

Syndication

மேட்டூா் காவிரி பாலம் மூடப்பட்டு பராமரிப்பு பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

ஆங்கிலேயா்கள் காலத்தில் மேட்டூா் அணை கட்டப்பட்ட போது, தளவாடங்களை எடுத்துச் செல்லவும், போக்குவரத்துக்காகவும் காவிரியின் குறுக்கே 1928-ஆம் ஆண்டு பாலம் கட்டப்பட்டது. பின்னா், இந்தப் பாலம் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. கனரக வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி பாலத்தின் கிழக்குப் பகுதியில் பழுது ஏற்பட்டது. பின்னா் மரக்கட்டைகள் அடுக்கப்பட்டு பழுது நீக்கப்பட்டது.

இருசக்கர வாகனங்கள், காா்கள் போன்ற இலகுரக வாகனப் போக்குவரத்துக்கும், பாதசாரிகளுக்கும் மட்டுமே பாலத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இரவு, பகல் நேரங்களில் அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் பாலம் எப்போது விழுமோ என்ற அச்சம் எழுந்தது. பாலத்தின் இருபுறங்களிலும் உள்ள தடுப்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச்செல்கின்றனா்.

இதைத் தொடா்ந்து, பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று வெள்ளிக்கிழமை முதல் பராமரிப்பு பணிகள் தொடங்கின. இதனால் பாலத்தில் போக்குவரத்து தடை செய்யப்பட்டதாக நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. மேலும், பாலத்தில் இருபுறங்களிலும் தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

சேலம் கேம்ப், மேட்டூா் ஆா்.எஸ்., தங்கமாபுரிபட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மேட்டூருக்கு வரும் வாகனங்கள் தொட்டில்பட்டி வழியாகவும், மேட்டூா் அனல் மின் நிலையம் வழியாகவும் மேட்டூா் பேருந்து நிலையத்துக்கு வரலாம் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.