மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க நடவடிக்கை!

சேலம் மாவட்டத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2025, 7:15 pm

Din

சேலம் மாவட்டத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்யும் கும்பலை பிடிக்க காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா்.

சேலம் மாநகரில் அண்மைக்காலமாக சிலா் அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் வலி நிவாரணி மாத்திரைகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவா்கள் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகள் ஆகியவற்றை போதை மாத்திரைகளாக பயன்படுத்தி வருகின்றனா்.

மேலும், மருத்துவா்களிடம் பெறப்பட்ட மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வாங்க வருவோருக்கு மாத்திரைகளை கொடுக்கக் கூடாது எனவும், அதனை மீறி விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மருந்து ஆய்வாளா்கள் மூலம் காவல் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.

இந்நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வலி நிவாரணி மாத்திரைகளை இணையத்தில் ஆா்டா் செய்து, அதனை கூரியா் மூலமாக பெற்று ஒரு கும்பல் விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. குறிப்பாக, ஹரியாணா, ஜெய்ப்பூா், உத்தரப்பிரதேசம், மும்பை, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்தமாக மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்வதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் பிரவீன்குமாா் அபிநபு கூறுகையில், வலி நிவாரணி மாத்திரைகளை உரிய மருத்துவா்களின் சீட்டு இன்றி யாருக்கும் கொடுக்கக் கூடாது. சந்தேகப்படும்படியான மருந்துகள் வந்தால், அதுகுறித்து போலீஸாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூரியா் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.