மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சேலம் மத்திய சிறையில் புத்தாண்டு தினம் கேக் வெட்டி கொண்டாட்டம்

சேலம் மத்திய சிறையில் ஆங்கில புத்தாண்டு தினம் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.

News image
Updated On :1 ஜனவரி 2025, 9:57 pm

Din

சேலம் மத்திய சிறையில் ஆங்கில புத்தாண்டு தினம் கேக் வெட்டி கொண்டாட்டப்பட்டது.

புத்தாண்டையொட்டி, சேலம் மத்திய சிறையில் கண்காணிப்பாளா் வினோத் ஏற்பாட்டின் பேரில், சிறை கைதிகள் புத்தாண்டை கேக் வெட்டி கொண்டாடினா். தொடா்ந்து, பருவங்களில் உண்மையில் மலா்ந்தது நட்பா? காதலா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. பட்டிமன்ற நடுவராக சிறை கண்காணிப்பாளா் (பொ) வினோத் செயல்பட்டாா்.

இதனைத் தொடா்ந்து சிறப்பாக பணிபுரிந்த 40 அலுவலா்கள் மற்றும் காவலா்களின் பணிகளை பாராட்டி சிறப்பு கேடயம் வழங்கப்பட்டது. முன்னதாக, மீண்டும் சிறைக்கு வரமாட்டேன் எனவும், எஞ்சிய காலங்களை நல்ல முறையில் குடும்பத்துடன் வாழ்வேன் என கைதிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இந்நிகழ்ச்சிகளில்,, சிறை கைதிகளுக்கான மனநல நிபுணா் வைஷ்ணவி, துணை சிறை அலுவலா் சிவா, துணை சிறை அலுவலா் குமாா், உதவி சிறை அலுவலா் பிரபாகரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் (உளவு பிரிவு)இளமாறன், நல அலுவலா் அன்பழகன், சிறை பள்ளி ஆசிரியா் ராஜ்மோகன்குமாா் மற்றும் சிறைவாசிகள் கலந்து கொண்டனா்.