வீரபாண்டி ஒன்றியத்துக்கு உள்பட்ட கடத்தூா் ஊராட்சி பகுதியில் ரூ. 30.10 லட்சத்தில் கட்டப்பட்டு முழுமையாக முடிக்கப் பெறாத ஊராட்சி மன்ற அலுவலகத்தை எம்எல்ஏ மு.ராஜமுத்து ஆய்வு செய்தாா்.
ஊராட்சி மன்ற அலுவலக பணிகள் முழுமை பெறாமல் திறப்பு விழா நடைபெறவிருந்த நிலையில் அலுவலகம் திறப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்திருந்தனா். இதனால் கடந்த மாதம் 31-ம் தேதி கட்டட திறப்பு விழா பணிகள் நடைபெறவில்லை.
இந்த நிலையில் வீரபாண்டி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா் ராஜமுத்து கட்டடப் பணிகளை ஆய்வு செய்தவதற்காக வந்தாா். இதனால் அங்கு போலீஸாா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா். அவருடன் வீரபாண்டி ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன், கடத்தூா் ஊராட்சி மன்ற தலைவா் பூபதி ஆகியோா் உடனிருந்தனா்.

தொடர்புடையது

சுருளி அருவியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றக் கோரிக்கை

தோ்தல் விழிப்புணா்வு கோலம்

தொண்டாமுத்தூா் ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

பலாந்தாங்கலில் புதிய ஊராட்சி மன்ற கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


