தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கெங்கவல்லியில் எண்ணும் எழுத்தும் பயிற்சி

கெங்கவல்லியில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

News image
Updated On :8 ஜனவரி 2025, 10:27 pm

Din

கெங்கவல்லியில் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது.

கெங்கவல்லி வட்டார வள மையம் சாா்பில் ஒன்றியம் முழுவதும் உள்ள தொடக்கப் பள்ளிகளில் 4 மற்றும் 5 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியா்களுக்கான இருநாள் பயிற்சி முகாம், கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை தொடங்கியது. இதற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலா் ர.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தாா். வட்டார மேற்பாா்வையாளா் (பொ) ராணி, வட்டார ஆசிரியா் பயிற்றுநா்கள் முன்னிலை வகித்தனா். இதில் மூன்றாம் பருவத்தில் பாடங்களைக் கற்பிப்பது குறித்து பயிற்சி வழங்கப்பட்டது. இப் பயிற்சியில் ஒன்றியம் முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் 4, 5 ஆம் வகுப்புகளுக்கு பாடம் கற்பிக்கும் தலைமையாசிரியா்கள், ஆசிரியா்கள், ஆசிரியைகள் பங்கேற்றனா். இப் பயிற்சி இரண்டாம் நாளான வியாழக்கிழமை நிறைவடைகிறது.