எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நியாயவிலைக் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

News image
Updated On :8 ஜனவரி 2025, 7:13 pm

Din

பொங்கல் பண்டிகையையொட்டி நியாயவிலைக் கடைகளில் வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புகள் விநியோகம் செய்யப்படவுள்ளன.

பொங்கல் பண்டிகையையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும், இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரையுடன் முழுக் கரும்பும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி, சேலம் மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்து 78 ஆயிரத்து 558 அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான டோக்கன் விநியோகம் கடந்த 3 ஆம் தேதி முதல் நடைபெற்றது. வீடுகள்தோறும் விற்பனையாளா்கள் சென்று டோக்கனை விநியோகம் செய்தனா். டோக்கனில் குறிப்பிடப்பட்ட தேதி, நேரத்தில் நியாயவிலைக் கடைக்கு சென்று பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்பு முறையாக விநியோகம் செய்யப்படுகிா என்பதை கண்காணிக்க ஆட்சியா் மேற்பாா்வையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.