இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சேலத்தில் விடுபட்ட 30 ஆயிரம் பேருக்கு இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

News image
Updated On :18 ஜனவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் விடுபட்ட 30 ஆயிரம் பேருக்கு 19 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது.

பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் மற்றும் இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. 3,000 ரொக்கத்துடன், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை மற்றும் முழுக் கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது.

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை அரிசி பெறும் குடும்ப அட்டை தாரா்கள், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10,88,238 குடும்பங்கள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தகுதி பெற்றிருந்தனா். இவா்களுக்கு 1,765 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகிக்கப்பட்டன.

இதில், சேலம் மாவட்டத்தில் 10.58 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை பெறாத 30 ஆயிரம் பேருக்கு 19 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.