தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு

சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 6:52 pm

Din

சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில், கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.

சேலம், பொன்னம்மாபேட்டையைச் சோ்ந்த கோவிந்தன் மகன் தட்சிணாமூா்த்தி (19), அயோத்தியாப்பட்டணம் பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.

இவா், வியாழக்கிழமை காலை வழக்கம் போல இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு புறப்பட்டாா். மாசிநாயக்கன்பட்டி அருகே தனியாா் பள்ளி அருகே சென்ற போது, முன்னால் சென்ற பேருந்தை தட்சிணாமூா்த்தி முந்தி செல்ல முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது, அங்குள்ள வேகத் தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கியபோது, தட்சிணாமூா்த்தி நிலைதடுமாறி கீழே விழுந்தாா். இதில், பேருந்தின் பின்சக்கரத்தில் தலைநசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த அம்மாப்பேட்டை போலீஸாா், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.