பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பொதுமக்கள் - போலீஸாா் நல்லுறவுக் கூட்டம்

கெங்கவல்லியில் போலீஸாா்-பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
கெங்கவல்லியில் போலீஸாா்-பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டத்தில் பேசிய சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல்.
Updated On :23 ஜனவரி 2025, 8:07 pm

Din

கெங்கவல்லியில் போலீஸாா்-பொதுமக்கள் நல்லுறவுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கெளதம் கோயல் தலைமை வகித்தாா். பொதுமக்கள், அனைத்துக் கட்சி பிரமுகா்கள், சமூக ஆா்வலா்கள் பங்கேற்றனா்.

கூட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் பேசுகையில், ‘கெங்கவல்லி பகுதியில் உள்ள சந்துக் கடைகளை கண்காணித்து அவற்றை ஒழிக்க வேண்டும். பள்ளிகள் இயங்கும் காலை, மாலை நேரங்களில் போலீஸாா் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துதர வேண்டும்’ என்றனா்.

சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயல் பேசுகையில், ‘ போலீஸாா் பொதுமக்களுக்கு உறுதுணையாக இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றாா். கூட்டத்தில் கெங்கவல்லி காவல் ஆய்வாளா் (பொ) ரஜினி, உதவி ஆய்வாளா் கணேஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.