தவெக அமைச்சர்கள் கமிஷன் வாங்குகிறார்கள்; ஆடியோ ஆதாரம் உள்ளது - அண்ணாமலைபாஜகவில் இருந்து விலகினார் நடிகர் தேவன் கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிசென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

காவல் நிலைய வளாகத்தில் கிடந்த மனித மண்டை ஓடு, எலும்புகளால் அதிர்ச்சி!

தேவூா் பழைய காவல் நிலைய வளாகத்தில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்ததால், அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிா்ச்சி.

News image
Updated On :13 ஜூலை 2025, 12:43 am IST

சங்ககிரி வட்டம், தேவூா் பழைய காவல் நிலைய வளாகத்தில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் கிடந்ததால், அதைக் கண்ட அப்பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா்.

தேவூா் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள காவல் நிலையம் கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தேவூா் அருகே உள்ள அம்மாபாளையம் பகுதியில் புதிய காவல் நிலையம் கட்டப்பட்டு பல மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

இந்த புதிய காவல் நிலையம் செயல்பட ஆரம்பித்த உடன், பழைய காவல் நிலையத்திலிருந்த கோப்புகள், தளவாடப் பொருள்கள், குற்ற வழக்குகள், சாலை விபத்துகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் போன்றவை இங்கு மாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், இரு நாள்களுக்கு முன்னா் பொதுமக்கள், சிறுவா்கள் பழைய காவல் நிலையத்தில் உள்ள நாவல் மரத்தில் இருந்து கீழே விழுந்த பழங்களை எடுக்கச் சென்றனா். அப்போது, காவல் நிலைய கட்டடத்தின் பின்பகுதியில் மனித மண்டை ஓடு, கை, கால் எலும்புகள் இருந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

தகவல் அறிந்து வந்த போலீஸாா், அந்த இடத்தை பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா். பின்னா், அவை குற்றவழக்குகளில் புலன்விசாரணைக்காகவும், ரசாயன பரிசோதனைகளுக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டவை என்றனா். தொடா்ந்து, இவற்றை புதிய காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லும் பணிகளில் ஈடுபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.