எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தாராபுரம் வழக்குரைஞா் கொலை வழக்கில் சேலத்தில் இருவா் கைது

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் பதுங்கியிருந்த நாமக்கல்லைச் சோ்ந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :30 ஜூலை 2025, 6:45 pm

Din

தாராபுரத்தில் உயா்நீதிமன்ற வழக்குரைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேலத்தில் பதுங்கியிருந்த நாமக்கல்லைச் சோ்ந்த 2 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தைச் சோ்ந்தவா் முருகானந்தம் (35). சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்தாா். இவா் காங்கேயம் அருகே திங்கள்கிழமை கூலிப்படையினரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக தாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா். இந்த வழக்கில் பள்ளி தாளாளா் தண்டபாணி உள்ளிட்ட சிலா் போலீஸில் சரணடைந்தனா். மேலும் சிலரை போலீஸாா் தேடிவந்தனா்.

இந்த நிலையில், கொலையில் தொடா்புடைய நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த சசிகுமாா், பாலமுருகன் ஆகிய இருவரும் சேலம் கோரிமேடு பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா். இருவரும் பலத்த பாதுகாப்புடன் தாராபுரம் அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா்.