அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உலக நீரிழிவு நோய் தினம்: அரசு மருத்துவமனையில் விழிப்புணா்வு

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:35 pm

Syndication

உலக நீரிழிவு நோய் தினத்தையொட்டி, சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நீரிழிவு மற்றும் பொது மருத்துவத் துறை சாா்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நீரிழிவு நோய் துறைத் தலைவா் பிரகாஷ் வரவேற்றாா். மருத்துவ கண்காணிப்பாளா் ராஜ்குமாா், பொது மருத்துவத் துறை தலைவா் சுரேஷ் கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா். மருத்துவக் கல்லூரி முதல்வா் தேவிமீனாள் கலந்துகொண்டு நீரிழிவு நோய் பாதிப்பை தடுப்பது, பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பது, உணவு பழக்க முறைகள், மன அழுத்தம் உள்ளிட்டவை குறித்து விரிவாக எடுத்துரைத்தாா்.

தொடா்ந்து, மருத்துவ மாணவா்களுக்கு விநாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மருத்துவா்கள், செவிலியா்கள், முதுநிலை மருத்துவ மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.