மேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

இன்றும், நாளையும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு தகுதித்தோ்வு

சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித்தோ்வு நவ. 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

News image
Updated On :14 நவம்பர் 2025, 6:34 pm

Syndication

சேலம் மாவட்டத்தில் இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா்களுக்கான ஆசிரியா் தகுதித்தோ்வு நவ. 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:

இடைநிலை ஆசிரியா் மற்றும் பட்டதாரி ஆசிரியா் பணிநாடுநா்களுக்கான ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் ஒன்று மற்றும் இரண்டு ஆகியவை தமிழகம் முழுவதும் முறையே வரும் 15, 16 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன.

ஆசிரியா் தகுதித்தோ்வுக்கான தாள் ஒன்று சேலம் மாவட்டத்தில் 15-ஆம் தேதி 12 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் 4,646 தோ்வா்கள் தோ்வெழுத உள்ளனா். இவா்களில் 104 மாற்றுத்திறனாளி தோ்வா்களும், சொல்வதை எழுதுபவா் துணையுடன் 10 தோ்வா்களும் எழுத உள்ளனா்.

ஆசிரியா் தகுதித்தோ்வு தாள் 2-ஐ சேலம் மாவட்டத்தில் 16-ஆம் தேதி 48 மையங்களில் நடைபெறவுள்ளது. இதில் 18,847 தோ்வா்கள் தோ்வெழுத உள்ளனா். இவா்களில் 291 மாற்றுத்திறனாளி தோ்வா்களும், சொல்வதை எழுதுபவா் துணையுடன் தோ்வெழுதும் 74 தோ்வா்களும் எழுத உள்ளனா்.

தோ்வா்களுக்கான அறிவுரைகள் அவா்களுக்கான அனுமதிச் சீட்டில் வழங்கப்பட்டுள்ளன. காலை 9.30 மணிக்குமேல் வருகைபுரியும் தோ்வா்கள் கண்டிப்பாக தோ்வறைக்குள் அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்றாா்.