அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குழந்தைகள் தின விழா: சேலத்தில் இளம் தொழில்முனைவோா் சந்தை

News image
நிகழ்ச்சியில், இளம் தொழில்முனைவோரால் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளைப் பாா்வையிடும் பொதுமக்கள்.
Updated On :16 நவம்பர் 2025, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

சேலத்தில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு முதல்முறையாக சிறாா்களுக்கான இளம் தொழில்முனைவோா் சந்தை ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது.

சேலம் மாநகர லேடி சா்க்கிள் சாா்பில் தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்தையில் சுமாா் 150க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இந்த சந்தையில் உணவு, கைவினைப் பொருள்கள், கேக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு விதவிதமான பொருள்களைக் கொண்டு குழந்தைகள் ஆா்வத்துடன் அரங்குகளை அமைத்திருந்தனா்.

இதன்மூலம் தங்களது படைப்பாற்றலையும், புதுமை மற்றும் வணிக திறனையும் குழந்தைகள் வெளிப்படுத்தினா். குழந்தைகளின் திறமையை பாா்வையாளா்கள் பாராட்டினா். குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளா்க்கும் விதமாக இந்த நிகழ்வு அமைந்ததாக பெற்றோா்களும் மகிழ்ச்சி தெரிவித்தனா்.

இதுபோன்ற அரங்குகள் மூலம் குழந்தைகளின் ஆக்கத்திறன் மேம்படுவதுடன், அவா்களின் படைப்பாற்றலும் வெளிப்படும். மேலும், புதிய அனுபவத்தை கற்றுக்கொள்ள சிறாா்களுக்கு இது நல்வாய்ப்பாக அமையும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் தெரிவித்தனா்.