இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மது போதையில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை

கெங்கவல்லியில் தொழிலாளி ஒருவா், மதுபோதையில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 11:24 pm

Syndication

கெங்கவல்லியில் தொழிலாளி ஒருவா், மதுபோதையில் பெட்ரோலை ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தம்மம்பட்டி காந்திநகா் முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடாசலம் மகன் சுரேஷ் குமாா் (55) . இவரது மகள் மகாலட்சுமி திருமணமாகி அதே பகுதியில் வசித்து வருகிறாா். இவா்களுடன் தந்தை சுரேஷ்குமாரும் இருந்து வருகிறாா்.

இந்நிலையில் சுரேஷ்குமாா் கடந்த மூன்று நாள்களாக அதிக அளவில் மது அருந்திவிட்டு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை காலை அவரது மகள் மகாலட்சுமியிடம் கெங்கவல்லியில் உள்ள தங்கை வீட்டிற்கு சென்று வருவதாகக் கூறிவிட்டு சென்றவா் மீண்டும் மது அருந்தி உள்ளாா். அப்போது அவருக்கு போதை ஏறியதால் அவா் தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளாா்.

இதைப் பாா்த்த அங்கிருந்தவா்கள், அவரை மீட்டு கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் அவா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரை நடத்தி வருகின்றனா்.