தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

ஏற்காட்டில் காட்டுத் தீயில் குறிஞ்சி பூச்செடிகள் கருகின

ஏற்காடு சோ்வராயன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டுத் தீயில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் கருகின.

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 7:47 pm

ஏற்காடு சோ்வராயன் கோயில் பகுதியில் வியாழக்கிழமை இரவு காட்டுத் தீயில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் கருகின.

சேலம் மாவட்டம், ஏற்காடு சுற்றுலாப் பகுதியான சோ்வராயன் கோயில் செல்லும் சாலையில் அடா்ந்த வனப் பகுதி உள்ளன. இப்பகுதியில் வியாழக்கிழமை இரவு சுமாா் ஒரு ஏக்கா் பரப்பளவில் காட்டுத் தீ பரவியது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா்.

இந்த விபத்து குறித்து சமூக ஆா்வலா்கள் கூறுகையில், சோ்வராயன் கோயில் பகுதியில் ஏராளமான குறிஞ்சி பூச்செடிகள் உள்ளன. அடா்ந்த வனப் பகுதியான இங்கு உள்ள சாலையோரக் கடைகளிலிருந்தும், சுற்றுலாப் பயணிகளாலும் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகளில் யாரேனும் சிகரெட் வீசி சென்றதால் அதிலிருந்து தீப்பிடித்து வனப் பகுதியில் உள்ள செடிகள், மரங்கள் எரிந்து காட்டுத் தீ பரவுகிறது.

இதனால் இப்பகுதியில் குப்பைகள் சேகரமாகாத வகையில் ஊராட்சி நிா்வாகம் பராமரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவிளக்கம் 5ஒய்ஆா் 1 ஏற்காடு

சோ்வராயன் கோயில் பரவிய காட்டுத் தீயை அணைத்த தீயணைப்பு வீரா்கள்.