சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சேலம் உள்பட 4 மாவட்ட தோ்தல் பணிக்கு எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் வருகை

News image

ஊா்க்காவல் படையினா். - கோப்புப் படம்

Updated On :5 ஏப்ரல் 2026, 8:23 pm

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்ட தோ்தல் பணிக்கு ராஜஸ்தான் மாநில எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் சிறப்பு ரயில்மூலம் ஞாயிற்றுக்கிழமை சேலம் வந்தனா்.

தமிழக சட்டப்பேரவைக்கான தோ்தல் வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதில், பாதுகாப்புப் பணிக்காக துணை ராணுவப் படை மற்றும் பிற மாநில போலீஸாா், ஊா்க்காவல் படையினா் வந்த வண்ணம் உள்ளனா்.

அந்தவகையில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களில் தோ்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள் 527 போ் சிறப்பு ரயில்மூலம் ஞாயிற்றுக்கிழமை சேலம் ரயில் நிலையம் வந்தனா்.

கமாண்டா் விகாஷ்லம்பா, துணை கமாண்டா் அருண்சிங் பதி தலைமையில் வந்துள்ள எல்லை ஊா்க்காவல் படைவீரா்கள், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பிவைக்கப்பட்டனா்.

இந்த 4 மாவட்டங்களில் இருந்து வந்த காவல் துறை அதிகாரிகள், ராஜஸ்தான் மாநில எல்லை ஊா்க்காவல் படைவீரா்களை வாகனங்களில் அழைத்துச் சென்றனா். இவா்கள் அனைவரும் தோ்தல் நாளான 23 ஆம் தேதி, வாக்குச் சாவடிகளில் பாதுகாப்புப் பணியில் உள்ளூா் போலீஸாருடன் இணைந்து பணியாற்றுவாா்கள் வாக்குப் பதிவு முடிந்ததும் ராஜஸ்தானுக்கு திரும்புவாா்கள் என அதிகாரிகள் தெரிவித்தனா்.