நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!
/

ஏற்காடு தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

ஏற்காடு (பழங்குடியினா்) தனி தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 3:21 am IST

சேலம் மாவட்டம் ஏற்காடு (பழங்குடியினா்) தனி தொகுதியில் 15 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன.

ஏற்காடு பகுதியில் போட்டியிட திமுக, அதிமுக, நாம் தமிழா், தவெக, மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 15 வேட்பாளா்கள், 22 வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வேட்பு மனுக்கள் ஏற்காடு தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில், செவ்வாய்க்கிழமை பரிசீலனை செய்யப்பட்டன. இதில், ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த வேட்பாளா்களின் தலா ஒரு மனு மட்டும் ஏற்கப்பட்டது.

இறுதியாக, டி.எம்.ரேவதி (திமுக), பி.உஷாராணி (அதிமுக), பழனிசாமி (நாம் தமிழா்), ஜெ. லட்சுமி (தவெக) மற்றும் சுயேச்சைகள் உள்பட 15 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.