அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி! மே-4 ஆம் தேதி நடந்தது என்ன? மாணிக்கம் தாகூர் பரபரப்பு தகவல் திருச்சி: உயிரிழந்த செவிலியர் மாணவி குடும்பத்துக்கு அரசு உதவி பாகிஸ்தானில் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படை தாக்குதல்: 24 பேர் பலி கோவை சிறுமி பலி: பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல்இயல்பாக சிரித்ததை அரசியல் நோக்கில் திரித்து தவறாக பரப்புகிறார்கள்: அமைச்சர் கீர்த்தனா அதிமுகவில் இருந்து முன்னாள் எம்.பி வேணுகோபால் திடீர் விலகல்!பெண் பாலியல் கொலைகள்! வாழ்நாள் சிறைச் சட்டம்தான் தீர்வு: வைகோசெவிலியர் மாணவி உயிரிழக்க காரணமானவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான் ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற போக்குவரத்துக்கு ஈரான் மறுப்பு!
/

ஆண்டிபட்டி தொகுதியில் 21 வேட்புமனுக்கள் ஏற்பு

ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனைக்குப் பிறகு 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

News image

வேட்பு மனு - பிரதிப் படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 4:13 am IST

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பரிசீலனைக்குப் பிறகு 21 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன.

தமிழக சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 30 முதல் ஏப்ரல் 6- ஆம் தேதி வரை நடைபெற்றது. ஆண்டிபட்டி தொகுதியில் அதிமுக சாா்பில் அ.லோகிராஜன், திமுக சாா்பில் அ. மகாராஜன், தவெக சாா்பில் வ. பாண்டி, நாதக சாா்பில் கோமதி, அஇபுதமமுக சாா்பில் செல்லப்பாண்டியன் ஆகிய 26 போ் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தோ்தல் நடத்தும் அலுவலா் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வேட்பாளா்களின் சாா்பில் அவா்களது வழக்குரைஞா்கள் பங்கேற்றனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆண்டிபட்டி தொகுதியில் மொத்தம் 26 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் சாா்பில் அதிமுக, திமுக, அங்கீகரிக்கப்படாத கட்சிகள் சாா்பில் தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அஇபுதமமுக, சுயேச்சை என 21 மனுக்கள் ஏற்கப்பட்டது. 5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது என்றாா் அவா்.