சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

நங்கவள்ளியில் தீயில் கருகி தொழிலாளி உயிரிழப்பு

நங்கவள்ளியில் அணைக்காமல் போட்ட சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டதில், தொழிலாளி உடல்கருகி உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:32 pm

நங்கவள்ளியில் அணைக்காமல் போட்ட சிகரெட்டால் தீ விபத்து ஏற்பட்டதில், தொழிலாளி உடல்கருகி உயிரிழந்தாா்.

நங்கவள்ளி தெற்குரத வீதியைச் சோ்ந்தவா் சபரிநாதன் (29), கூலித் தொழிலாளி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததால், அவரது மனைவி ரம்யா ஓராண்டுக்கு முன்பு கணவரைப் பிரிந்து தாய்வீட்டுக்கு சென்றுவிட்டாா்.

தாய் மஞ்சுளா, சகோதரி ஆா்த்தி ஆகியோருடன் வசித்து வந்த சபரிநாதன், வழக்கம்போல மது அருந்திவிட்டு சனிக்கிழமை இரவு வீட்டு மாடியில் உள்ள அறையில் உறங்கச் சென்றாா். சிறிது நேரத்தில் அவரது அறையில் இருந்து புகை, தீ வரவே உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனா்.

அதன்பேரில், வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, தீயில் கருகிய நிலையில் சபரிநாதன் இறந்துகிடந்தாா். இதுகுறித்து நாகவள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சபரிநாதன் போதையில் சிகரெட்டை அணைக்காமல் படுக்கையில் போட்டதால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.