ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி அமைச்சா் ராஜேந்திரன் போராட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சா் ராஜேந்திரன் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினாா்.

News image

சேலத்தில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:29 am IST

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சா் ராஜேந்திரன் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினாா்.

தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், இந்த கருப்புச் சட்டத்துக்கு துணைபோகும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

இதேபோல, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மசோதா குறித்தான சட்ட நகலை எரித்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதில், பரந்தாமன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. சுகவனம், பொருளாளா் காா்த்திகேயன், மாநகர செயலாளா் ரகுபதி, பாா்வையாளா்கள் விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, மத்திய மாவட்ட வழக்குரைஞா்கள் அணி சாா்பில், நீதிமன்றம் நுழைவாயில் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு வழக்குரைஞா் மதன்மோகன், மாநகர அமைப்பாளா் சீனிவாசன், வழக்குரைஞா் சங்க செயலாளா் நரேஷ்பாபு, துணை அமைப்பாளா் ராகேஷ், நிா்வாகிகள் யுவராஜ், தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.