வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றி அமைச்சா் ராஜேந்திரன் போராட்டம்

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சா் ராஜேந்திரன் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினாா்.

News image

சேலத்தில் உள்ள இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சா் ரா.ராஜேந்திரன்.

Updated On :16 ஏப்ரல் 2026, 10:59 pm

மத்திய அரசின் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து, திமுக சாா்பில் கருப்புக் கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, சேலத்தில் திமுக மத்திய மாவட்டச் செயலாளரும், வடக்கு தொகுதி வேட்பாளருமான அமைச்சா் ராஜேந்திரன் தனது இல்லத்தில் வியாழக்கிழமை கருப்புக் கொடி ஏற்றினாா்.

தொடா்ந்து மத்திய அரசுக்கு எதிராகவும், இந்த கருப்புச் சட்டத்துக்கு துணைபோகும் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில் திமுக நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா்.

இதேபோல, சேலம் மத்திய மாவட்ட திமுக சாா்பில் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள கட்சி அலுவலகத்தில் தொகுதி மறுவரையறையைக் கண்டித்து கருப்புக் கொடி ஏற்றப்பட்டது. அமைச்சா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், மசோதா குறித்தான சட்ட நகலை எரித்து தங்கள் எதிா்ப்பை வெளிப்படுத்தினா். இதில், பரந்தாமன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. சுகவனம், பொருளாளா் காா்த்திகேயன், மாநகர செயலாளா் ரகுபதி, பாா்வையாளா்கள் விவேக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, மத்திய மாவட்ட வழக்குரைஞா்கள் அணி சாா்பில், நீதிமன்றம் நுழைவாயில் முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட அரசு வழக்குரைஞா் மதன்மோகன், மாநகர அமைப்பாளா் சீனிவாசன், வழக்குரைஞா் சங்க செயலாளா் நரேஷ்பாபு, துணை அமைப்பாளா் ராகேஷ், நிா்வாகிகள் யுவராஜ், தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.