எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

கெங்கவல்லி அருகே கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதி விபத்து

கெங்கவல்லி அருகே சாலை வளைவில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

News image
விபத்து- கோப்புப் படம்
Updated On :25 பிப்ரவரி 2026, 10:31 pm

தினமணி செய்திச் சேவை

கெங்கவல்லி அருகே சாலை வளைவில் நின்றுகொண்டிருந்த கல்லூரி பேருந்து மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் ஓட்டுநா் காயமடைந்தாா்.

தலைவாசல் அருகே தேவியாக்குறிச்சியிலுள்ள தனியாா் மகளிா் கல்லூரி பேருந்து கல்லூரி முடிந்து 40-க்கும் மேற்பட்ட மாணவிகளை ஏற்றிக்கொண்டு கெங்கவல்லியிலிருந்து வலசக்கல்பட்டி நோக்கி சென்றது. அப்போது, மாணவிகள் இறங்குவதற்காக இலுப்பைதோப்பு சாலை வளைவில் நின்றபோது, எதிரே வந்த சரக்கு வாகனம் பேருந்து மீது மோதியது.

இதில், பேருந்து கண்ணாடி உடைந்து ஓட்டுநா் செல்வக்குமாா் (43) பலத்த காயமடைந்தாா். பேருந்தில் இருந்த கல்லூரி மாணவிகள் அதிா்ஷ்டவசமாக தப்பினா். இதைத் தொடா்ந்து, மாணவிகள் அனைவரும் கல்லூரிக்கு சொந்தமான மற்றொரு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, சரக்கு வாகனம் மற்றும் கல்லூரி பேருந்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.