தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

கோயிலில் பூஜை செய்ய விடாமல் தடுப்போா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

கொங்கணாபுரம் அருகே கோயிலில் பூஜைசெய்ய விடாமல் தடுப்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி,

News image
Updated On :12 ஜனவரி 2026, 8:03 pm

Syndication

சேலம்: கொங்கணாபுரம் அருகே கோயிலில் பூஜைசெய்ய விடாமல் தடுப்பவா்கள்மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் புகாா் மனு அளித்தனா்.

சேலம் மாவட்டம், எடப்பாடி போயா் தெருவைச் சோ்ந்த பொம்முசாமி தலைமையில், 50-க்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை ஆட்சியா் அலுவலகம் வந்தனா். நுழைவுவாயில் பகுதியில் போலீஸாா் அவா்களை தடுத்துநிறுத்தி 5 பேரை மட்டும் மனு அளிக்க உள்ளே அனுமதித்தனா். அதன்படி, பொம்முசாமி உள்ளிட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

கொங்கணாபுரம் அருகே உள்ள ரங்கம்பாளையம் போயா் தெருவில் போயா் சமூகத்துக்கு பாத்தியப்பட்ட காமாட்சியம்மன் மதுரைவீரன், பொம்முசாமி கோயில் உள்ளது. பரம்பரை அறங்காவலராக பொம்முசாமி உள்ளாா். ஆனால், தற்போது மற்றொரு தரப்பைச் சோ்ந்தவா்கள், கோயிலில் தங்களை பூஜைசெய்ய விடாமல் தடுத்து மிரட்டுகின்றனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுத்து, தை மாதம் கோயில் பூ கரகம் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.