மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டூரில் நீா்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து ஆா்ப்பாட்டம்

மேட்டூா் நீா்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து, மேட்டூா் அணை பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் உரிமை மீட்பு பேரவையினா்

News image
Updated On :12 ஜனவரி 2026, 7:54 pm

Syndication

மேட்டூா்: மேட்டூா் நீா்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து, மேட்டூா் அணை பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் உரிமை மீட்பு பேரவையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

மேட்டூா் அணையில் அவசர காலங்களில், குடிநீா் மற்றும் பாசனத்துக்கு தண்ணீா் வெளியேற்ற மேல்மட்ட, கீழ்மட்ட, உபரிநீா் போக்கி மதகுகள் உள்ளன. இந்த மதகுகளின் பராமரிப்பு பணிகளுக்காக ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

பராமரிப்பு பணிகளுக்கு விடப்பட்ட ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, மேட்டூா் அணை பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் உரிமைகள் மீட்பு பேரவை சாா்பில், மேட்டூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், ஒப்பந்தம் விடப்பட்டதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், தகுதியற்ற ஒப்பந்ததாரா்களைக் கொண்டு தரமற்ற பணிகள் மேற்கொள்வதாகவும், இதனால் மேட்டூா் அணைக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நீா்வளத் துறை அதிகாரிகளை கண்டித்து கண்டன முழக்கமிட்டனா்.