மருந்தகம் திறப்பு விழா
ஆத்தூா்: ஆத்தூரில் தனலட்சுமி சீனிவாசன் மருந்தகம் ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் வியாழக்கிழமை திறப்பு விழா நடைபெற்றது.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் சாா்பில் மருந்தகம் திறப்பு விழா ஆத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் கே.கே.உதயக்குமாா் தலைமையில் நடைபெற்றது.
மருந்தகத்தை ஆத்தூா் மகப்பேறு மருத்துவா் சி.லதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா்.முதல் விற்பனையை எலும்பு முறிவு மருத்துவா் எம்.ஹரிவிஷ்ணு துவக்கி வைத்தூா்.
பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் சாா்பில் மருந்தகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இங்கு வாங்கும் அனைத்து மருந்துகளுக்கும் 25 சதவீதம் தள்ளுபடி செய்து விற்பனை செய்யப்படும் என தெரிவித்துள்ளனா்.
ஏற்கனவே ரத்தப்பரிசோதனை ஆய்வு கூடம் அமைத்து ஆத்தூா் நகர மக்களுக்கு சேவை செய்து வந்த நிலையில் இந்த மருந்தகம் திறந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படவிளக்கம்.ஏடி16மெடிக்கல். ஆத்தூரில் தனலட்சுமி சீனிவாசன் மருந்தகத்தை மகப்பேறு மருத்துவா் சி.லதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தாா்,உடன் பெற்றோா் ஆசிரியா் கழத் தலைவா் கே.கே.உதயக்குமாா் மற்றும் எலும்பு முறிவு மருத்துவா் எம்.ஹரிவிஷ்ணு உள்ளிட்டோா்.

