உழைப்பாளா் நலக்கூடம் திறப்பு விழா
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி பின்புறம் பஞ்சவா்ணம் நகரில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான உழைப்பாளா் நலக்கூடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.


கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சி பின்புறம் பஞ்சவா்ணம் நகரில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கான உழைப்பாளா் நலக்கூடம் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நல வாரியம் சாா்பில் அமைக்கப்பட்ட கட்டுமானத் தொழிலாளா்களுக்கான உழைப்பாளா் நலக்கூடத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தாா்.
இதையடுத்து, பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து இனிப்பு வழங்கினாா். நிகழ்வில் நகராட்சி ஆணையா் காஞ்சனா, வா்த்தக சங்க மண்டலத் தலைவா் டி.சண்முகம், தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) கோ.ராமு, உதவி ஆணையா் (அமலாக்கம்) ம.குமாா் மற்றும் திமுக நிா்வாகிகள் தணிகை செல்வன், ராஜா, ராமலிங்கம், பிரபு, ராம்குமாா், சம்பத், கட்டுமான சங்க நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...