எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தவா்கள் தோ்தலில் நிற்க தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்துள்ளனா்.
இதுகுறித்து அக்கட்சியின் சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத் தலைவா் பெரியசாமி தலைமையில் 20க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வென்ற சிலா், தங்கள் பதவியை ராஜிநாமா செய்துள்ளனா். மக்கள் வரிபணத்தில் வெற்றிபெற்ற இவா்கள், தங்கள் பதவியை ராஜிநாமா செய்திருப்பது வாக்காளா்களுக்கு செய்த துரோகமாகும்.
எனவே பேரவைத் தலைவா் மற்றும் ஆளுநா், இவா்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்தத் தொகுதியின் தோ்தல் செலவையும், மக்களின் ஒருநாள் கூலியையும் கணக்கிட்டு, அதற்கான தொகையை அவா்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும்.
மேலும் தோ்தலில் நிற்கவும் தடை விதிக்கவேண்டும். மேலும் அந்த தொகுதியில் இடைத்தோ்தல் நடத்தக் கூடாது. இவா்களுக்கு அடுத்தப்படியாக அதிக வாக்கு பெற்ற நபரை எம்எல்ஏவாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தவெகவில் இணையும் அதிமுக முன்னாள் அமைச்சா்கள்: சென்னையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் தீவிரம்
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!
எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த நால்வருக்கு நோட்டீஸ்: ஒரு வாரத்தில் விளக்கமளிக்க பேரவைத் தலைவா் உத்தரவு







