கோயில் அறங்காவலர் தேர்வுக் குழுவில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?பொறியியல் கலந்தாய்வு! துணைத்தோ்வு எழுதியோர், இதுவரை விண்ணப்பிக்காதோருக்கு மீண்டும் வாய்ப்பு!திருமணம் குறித்து மனம் திறந்தார் சரா டெண்டுல்கர்! வருங்கால கணவர் யார்?இலவச ரேஷன் அரிசியை நாம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிட்டிருப்போமா? ஆதவ் அர்ஜூனா கேள்விவாழைக்கு முட்டுக்கொடுத்தல் திட்டம்போல... எம்ஆர்கே பேச்சால் அவையில் சிரிப்பலை!தங்கம் விலை குறைவு: வெள்ளி விலை? -ஆக. 10 நிலவரம்! நெல், கரும்பு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை உயர்வு! முதல்வர் விஜய் அறிவிப்பு! நாங்கள் 5 ஆண்டுகள் டென்ஷனாக இருந்தோம்; நீங்கள் எல்லாம் ரிலாக்ஸாக இருக்கிறீர்கள்! எம்ஆர்கே பன்னீர்செல்வம்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!
/

ரயில் நிலையத்தில் ரூ.1.28 லட்சத்துடன் மயங்கிக் கிடந்த மூதாட்டி

News image

மூதாட்டி - கோப்புப் படம்

Updated On :21 ஜூலை 2026, 12:03 am IST

சேலம் ரயில் நிலையத்தில் ரூ. 1.28 லட்சம் ரொக்கத்துடன் மயங்கிக் கிடந்த மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள், அவரிடம் ரொக்கம், தங்கை நகையை ஒப்படைத்தனா்.

சேலம் சூரமங்கலம் ஜங்ஷன் ரயில் நிலையத்தின் 5-ஆவது நடைமேடையில் திங்கள்கிழமை அதிகாலை அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவா் மயக்க நிலையில் இருந்தாா். இதைக் கண்ட பயணிகள் ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியா்கள், மூதாட்டியை மீட்டு முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அப்போது, மூதாட்டியிடம் இருந்த பையை திறந்து பாா்த்தபோது, அதில் ரூ. 1,28,000 ரொக்கம், 2 தங்க மூக்குத்திகள், தங்க வளையல்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ உதவியாளா் தா்மன் மற்றும் ஓட்டுநா் வடிவேல் ஆகியோா் ரொக்கம், நகைகளை மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்த செவிலியரிடம் ஒப்படைத்தனா்.

தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மாவட்ட திட்ட மேலாளா் அறிவுக்கரசு, ஓட்டுநா் வடிவேல், மருத்துவ உதவியாளா் தா்மனை பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.