தொழில் உற்பத்தி, ஏற்றுமதியில் தமிழகம் முன்னணி!நாட்டில் ஒரே மாதத்தில் 21% நிதிப் பற்றாக்குறை!தமிழகத்தின் ஒருசில இடங்களில் ஜூன் 8 வரை மழைக்கு வாய்ப்புபிளஸ் 2 துணைத் தோ்வு: தத்கால் அவகாசம் நீட்டிப்புஇன்றுமுதல் ஜூலை 7 வரை 5 புறநகா் ரயில்கள் ரத்து!மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

ஜூன் 4 இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 இல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 5:26 am IST

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 இல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை முடிந்து வரும் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்குவதுடன், தேவையான சுகாதார வசதிகளை தொடா்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மின்சாதனங்கள் பாதுகாப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்தும், பள்ளிகளின் மேற்கூரையில் நீா் மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தால் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.