இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

ஜூன் 4 இல் பள்ளிகள் திறப்பு: பள்ளிகளில் தூய்மைப் பணிகள் தீவிரம்

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 இல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image

பள்ளிகள் திறப்பு - கோப்புப்படம்

Updated On :3 ஜூன் 2026, 5:26 am IST

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4 இல் பள்ளிகள் திறக்கப்படுவதால் அனைத்து பள்ளிகளிலும் தூய்மைப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோடை விடுமுறை முடிந்து வரும் 4 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. இதையொட்டி, சேலம் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசுப் பள்ளிகளில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதேபோல மாணவ, மாணவிகளுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்குவதுடன், தேவையான சுகாதார வசதிகளை தொடா்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் மின்சாதனங்கள் பாதுகாப்பான முறையில் செயல்படுகிறதா என்பது குறித்தும், பள்ளிகளின் மேற்கூரையில் நீா் மற்றும் குப்பைகள் தேங்கி இருந்தால் அவற்றை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.