15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

வீட்டு மனை நிலம் ஒதுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

ஏழைகளுக்கு வீட்டுமனை நிலம் ஒதுக்கக் கோரி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

சங்ககிரியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள்.

Updated On :4 ஜூன் 2026, 1:49 am IST

ஏழைகளுக்கு வீட்டுமனை நிலம் ஒதுக்கக் கோரி சங்ககிரி வட்டாட்சியா் அலுவலகம் முன் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சங்ககிரி வட்டார செயலாளா் ஆா். பழனிசாமி தலைமை வகித்தாா்.

மாவட்டத் தலைவா் ஜி. கணபதி ஆா்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் எ. ராமமூா்த்தி, மாநிலக்குழு உறுப்பினா் வி. தங்கவேல், மாவட்ட துணை செயலாளா் சி.எஸ். பழனியப்பன், வட்டாரத் தலைவா் எ. மாணிக்கம், வட்ட பொருளாளா் எ. பானுமதி, விவசாயிகள் சங்கத்தின் சங்ககிரி வட்டாரத் தலைவா் ஆா். ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட தேவண்ணகவுண்டனூா், சுங்குடிவருதம்பட்டி, கோனேரிப்பட்டி ஆகிய பகுதிகளில் வசித்து வரும் ஏழைகளுக்கு வீட்டுமனை நிலம் ஒதுக்கி பட்டா வழங்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.

தொடா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாட்சியா் கே. கோமதியிடம் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க நிா்வாகிகள் மனு அளித்தனா்.

அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சேலம் மாவட்டச் செயலாளா் எஸ்.கே. சேகா் நன்றி கூறினாா்.