மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

வாக்காளர்களுக்கு தவெக பணம்? வேட்பாளர் பேச்சால் பரபரப்பு!

ஓமலூா் தொகுதியில் தவெக தோல்விக்கு தவெக எம்எல்ஏதான் காரணம்

News image

தீவட்டிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஓமலூா் தவெக வேட்பாளா் அதியமான்.

Updated On :5 ஜூன் 2026, 4:10 am IST

ஓமலூர் : சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ லட்சுமணன் வாக்காளர்களுக்கு பணம் தந்ததால்தான் அத்தொகுதிக்கு அருகே உள்ள ஓமலூர் தொகுதியில் தவெக வெற்றி பெற முடியாமல் போனதாக ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட அதியமான் பொதுக்கூட்டத்தில் பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் சேலம் மாவட்டம், ஓமலூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் அதியமான். இவர் ஓமலூர் அருகே தீவட்டிப்பட்டியில் அண்மையில் நடைபெற்ற வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசும்போது, ஓமலூர் தொகுதியில் தவெக வெற்றிவாய்ப்பை இழந்ததற்கு, ஓமலூருக்கு அருகே உள்ள சேலம் மேற்கு தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லட்சுமணன், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததுதான் காரணம்.

அத்தொகுதியில் தவெக வேட்பாளர் பணம் தந்த செய்தி ஓமலூர் தொகுதி மக்களிடமும் பரவியதால், நமக்கு அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் 6,000 முதல் 10,000 வாக்குகள் தவெகவுக்கு பதிவாகாமல் போனது என்றார்.