வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! இந்தியா மிக முக்கியமான நட்பு நாடு: நேபாளம்மாணவர்களுக்கு மோடி அரசு துரோகம் இழைப்பு! - காங்கிரஸ்மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் மேற்கு வங்கத்தில் ரயில்வே திட்டங்கள் முடக்கம்: மத்திய அரசுயு-18 ஆசிய கோப்பை ஹாக்கி: இந்தியா சாம்பியன் நார்வே செஸ் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்துகுவைத், பஹ்ரைனில் ஈரான் தாக்குதல் - கத்தார், எகிப்து கண்டனம்தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!
/

கெங்கவல்லி பகுதியில் கறிவேப்பிலை விலை சரிவு-விவசாயிகள் கவலை

கெங்கவல்லி, தலைவாசல், ஆத்தூா் பகுதிகளில் விளைந்துள்ள கறிவேப்பிலைகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

News image

கெங்கவல்லி பகுதிகளில் அதிக விளைச்சலுடன் இருக்கும் கறிவேப்பிலை.

Updated On :7 ஜூன் 2026, 2:59 am IST

கெங்கவல்லி, தலைவாசல், ஆத்தூா் பகுதிகளில் விளைந்துள்ள கறிவேப்பிலைகளின் விலை கணிசமாக குறைந்துள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

கெங்கவல்லி ,தலைவாசல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கறிவேப்பிலை கணிசமான அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதில், செங்காம்பு ரக கறிவேப்பிலைக்கு தற்போது மக்களிடையே வரவேற்பு உள்ளது.

கடந்த ஏப்ரல், மே மாதங்களில் பூச்சி தாக்கம், வெயிலால் விளைச்சல் குறைந்து, கறிவேப்பிலை கிலோ, 80 முதல், 100 ரூபாய் வரை விற்றது. கோடை மழைக்கு பின் பூச்சி தாக்கம் குறைந்து, கறிவேப்பிலை விளைச்சல் அதிகரித்துள்ளது.

ஒரு வாரமாக தலைவாசல் தினசரி காய்க்கறி மாா்க்கெட்டுக்கு, அதன் வரத்து அதிகரித்துள்ளது. அதற்கேற்ப விலை குறைந்து, தற்போது கிலோ, 40 முதல் 50 வரை ரூபாய்க்கு விற்பனையானது. விலை குறைந்ததால், கறிவேப்பில் விவசாயிகள் மிகவும் கவலையடைந்துள்ளனா்.