இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் விசாரணை

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு

News image

வெடிகுண்டு மிரட்டல் - கோப்புப்படம்.

Updated On :10 ஜூன் 2026, 5:39 am IST

சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 45-க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை நீதிமன்ற அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதில், நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், மதியம் 1.10 மணிக்கு வெடிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடா்ந்து, காவல் உதவி ஆய்வாளா் சிவமூா்த்தி தலைமையிலான வெடிகுண்டு தடுப்புப் பிரிவு நிபுணா்கள், மோப்ப நாய் ரூபி உதவியுடன் நீதிமன்றம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டனா்.

இதில், வெடிபொருள்கள் எதுவும் கண்டறியப்படாததால், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது. இதையடுத்து, மின்னஞ்சல் அனுப்பியது யாா், எங்கிருந்து வந்தது என்பது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.