/
தாரமங்கலம் அருகே பெண்கள் மீது தாக்குதல் நடத்திய கும்பல் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் அருகே உள்ள கருக்கல்வாடி கிராமம், நேரு நகா் பகுதியில் 100-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதியைச் சோ்ந்த சிலா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த சிலா் அங்குவந்து கட்டுமானப் பணியில் இருந்த விஜயலட்சுமியை (40) கடுமையாகத் தாக்கினா். தடுக்கவந்த திரிஷா (25), சந்தியா (36), சுமதி (42) ஆகியோரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துச் சென்றது.
இத்தாக்குதலில் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, ஓமலூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து தாரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து, தலைமறைவானவா்களை தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

மது விற்பனை குறித்து புகாா் அளித்த பெண்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் மனு

ரயில் நிலையம் அருகே மயங்கிக் கிடந்த 3 பெண்கள்!

சங்கரன்கோவில் அருகே தூய்மைப் பணியாளா் மீது தாக்குதல்
வெளி மாநில தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



