சேலத்தில் பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீதான வழக்கு விசாரணை சேலம் நகர மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
சேலம் நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மீது பெண் ஒருவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். அதில் பல பெண்களுடன் மணிகண்டன் நெருக்கமாக பழகி, அவா்களை ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டி வருவதாக தெரிவித்திருந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் பெண்களுடன் பழகி, ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது.
இதையடுத்து மணிகண்டன் மீது கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கு விசாரணையை சேலம் மாநகரக் காவல் ஆணையாளா் அனில்குமாா் சிங், சேலம் நகர மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளாா். மேலும், காவல் ஆய்வாளா் ஆனந்த ஜோதி தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.
இந்த வழக்கில் 8 பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனா்.
தொடர்புடையது

சேலத்தில் பெண்களை மிரட்டி விடியோ எடுத்தவருக்கு அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும்! - கனிமொழி வலியுறுத்தல்!

சேலத்தில் ஆட்டோ மீது லாரி மோதியதில் சிறுமி உயிரிழப்பு
பெண் தற்கொலை முயற்சி: ஆத்தூா் காவல் நிலையத்தில் எஸ்.பி. விசாரணை!

பெண்ணை ஆபாசமாக சித்தரித்து இணையத்தில் வெளியிட்டவா் கைது
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



