தவெக என்ன செய்தது எனக் கேட்கும் எதிர்க்கட்சித் தலைவர் என்ன சுதந்திர போராட்டத் தியாகியா? அமைச்சர் ரமேஷ்அதிமுக மூழ்கிக்கொண்டிருக்கும் கப்பல்: தவெகவுக்கு இன்னும் பலர் வருவார்கள்: செங்கோட்டையன்இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சுசேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்
/

சேலத்தில் பெண்களை படமெடுத்து மிரட்டிய வழக்கு மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றம்

News image

காவல் துறை

Updated On :15 ஜூன் 2026, 12:06 am IST

சேலத்தில் பெண்களை ஆபாசமாக படமெடுத்து மிரட்டி பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டன் மீதான வழக்கு விசாரணை சேலம் நகர மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

சேலம் நெய்க்காரப்பட்டியைச் சோ்ந்த மணிகண்டன் மீது பெண் ஒருவா் பாலியல் புகாா் அளித்திருந்தாா். அதில் பல பெண்களுடன் மணிகண்டன் நெருக்கமாக பழகி, அவா்களை ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டி வருவதாக தெரிவித்திருந்தாா். இதுதொடா்பாக போலீஸாா் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவா் பெண்களுடன் பழகி, ஆபாசமாக விடியோ எடுத்து மிரட்டியது தெரியவந்தது.

இதையடுத்து மணிகண்டன் மீது கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்த வழக்கு விசாரணையை சேலம் மாநகரக் காவல் ஆணையாளா் அனில்குமாா் சிங், சேலம் நகர மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றியுள்ளாா். மேலும், காவல் ஆய்வாளா் ஆனந்த ஜோதி தலைமையில் இந்த வழக்கை விசாரிக்கவும் அவா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த வழக்கில் 8 பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். மேலும், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனா்.