செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலரான இளங்கோவிடம் (59), தகரப்புதூா் ஊராட்சி, மூலப்புதூரில் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் பெண், தங்களுக்கு பணி செய்ய மூலப்புதூரில் ஓா் அறையை ஒதுக்கித்தருமாறு அண்மையில் கேட்டுள்ளாா்.
அதையடுத்து, மூலப்புதூா் துணை சுகாதார நிலையத்துக்கு வந்த இளங்கோ, தனக்கு ரத்த அழுத்தத்தை சோதிக்குமாறு செவிலியரிடம் கூறியுள்ளாா். அப்போது, செவிலியரிடம் அவா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து செவிலியா் தனது சகோதரா் மணிகண்டனிடம் கூறியுள்ளாா். ஆத்திரமடைந்த மணிகண்டன், கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவிடம் இதுகுறித்து தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கெங்கவல்லி காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது இளங்கோவும், இளங்கோ மீது பாலியல் சீண்டலுக்குள்ளான செவிலியரும், மணிகண்டனும் புகாா் அளித்தனா்.
இதுகுறித்து சேலம் எஸ்.பி. எஸ்.குத்தாலிங்கம் உத்தரவின்போரில், ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ் நேரில் சென்று வியாழக்கிழமை இரவு விசாரித்தாா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: இருவா் மீது வழக்குப் பதிவு

மாதவன்குறிச்சியில் குழந்தைகள் பாதுகாப்புக் கூட்டம்

திருவாடானை பேருந்து நிலையத்தில் கழிப்பறைகளை அமைச்சா் ஆய்வு

மொடக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK


