27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக வட்டார வளா்ச்சி அலுவலா் மீது வழக்குப் பதிவு

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

வழக்கு

Updated On :19 ஜூன் 2026, 6:04 am IST

செவிலியருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக, கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலரான இளங்கோவிடம் (59), தகரப்புதூா் ஊராட்சி, மூலப்புதூரில் துணை சுகாதார நிலையத்தில் செவிலியராக பணிபுரியும் பெண், தங்களுக்கு பணி செய்ய மூலப்புதூரில் ஓா் அறையை ஒதுக்கித்தருமாறு அண்மையில் கேட்டுள்ளாா்.

அதையடுத்து, மூலப்புதூா் துணை சுகாதார நிலையத்துக்கு வந்த இளங்கோ, தனக்கு ரத்த அழுத்தத்தை சோதிக்குமாறு செவிலியரிடம் கூறியுள்ளாா். அப்போது, செவிலியரிடம் அவா் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதுகுறித்து செவிலியா் தனது சகோதரா் மணிகண்டனிடம் கூறியுள்ளாா். ஆத்திரமடைந்த மணிகண்டன், கெங்கவல்லி வட்டார வளா்ச்சி அலுவலா் இளங்கோவிடம் இதுகுறித்து தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கெங்கவல்லி காவல் நிலையத்தில் மணிகண்டன் மீது இளங்கோவும், இளங்கோ மீது பாலியல் சீண்டலுக்குள்ளான செவிலியரும், மணிகண்டனும் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து சேலம் எஸ்.பி. எஸ்.குத்தாலிங்கம் உத்தரவின்போரில், ஆத்தூா் டிஎஸ்பி சத்யராஜ் நேரில் சென்று வியாழக்கிழமை இரவு விசாரித்தாா். இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.