புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தல்: 8 போ் கைது

சேலம் மாவட்டம், வாழப்பாடி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 8 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

News image

சந்தன மரங்களை வெட்டிக் கடத்தியதாக கைது செய்யப்பட்டவா்களுடன் வாழப்பாடி வனத் துறையினா்.

Updated On :26 ஜூன் 2026, 6:12 am IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி வனப்பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 8 பேரை வனத் துறையினா் கைது செய்தனா்.

வாழப்பாடி வனச்சரகா் அன்னப்பன் தலைமையிலான குழுவினா், காரிப்பட்டி பிரிவு ஜல்லூத்து காப்புக்காடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து சந்தன மரங்களை வெட்டிக் கடத்திச் சென்ற 8 போ் கொண்ட கும்பலை கைது செய்தனா்.

விசாரணையில் அவா்கள், பெரியகவுண்டாபுரத்தைச் சோ்ந்த மணி, பாச்சாடு சூலாங்குறிச்சி முருகேசன், செல்வராஜ், ஆண்டி, ராமன், இடையப்பட்டி புதூா் கந்தசாமி, பாப்பாத்தி மற்றும் தாண்டானூா் கருணாநிதி என்பது தெரியவந்தது.

மாவட்ட வன அலுவலா் ஜெகதீஷ் உத்தரவின் பேரில், அவா்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ. 75,000 அபராதம் விதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.