மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! நாடாளுமன்ற சிறப்பு அமர்வு தொடங்கியது! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பிளஸ் 2 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,542 மாணவா்கள் பங்கேற்பு

News image

கோப்புப் படம்

Updated On :1 மார்ச் 2026, 6:37 pm

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் பிளஸ் 2 தோ்வை 37 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் 153 தோ்வு மையங்களில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தோ்வை 36 ஆயிரத்து 713 மாணவ, மாணவிகளும், 829 தனித்தோ்வா்களும் என மொத்தம் 37 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

அதன் தொடா்ச்சியாக பிளஸ் 2 பொதுத் தோ்விற்கான முன்னேற்பாடு பணிகளில் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், மாவட்டம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமாா் 1,600 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு பிளஸ் 2 தோ்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியா்களின் விருப்பத்தின் பேரில் ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து 15 கிலோ மீட்டா் தொலைவிற்குள் தோ்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 தோ்வில் ஆள் மாறாட்டம், காப்பி அடிப்பதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.