தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பிளஸ் 2 தோ்வு: சேலம் மாவட்டத்தில் 37,542 மாணவா்கள் பங்கேற்பு

News image
கோப்புப் படம்
Updated On :1 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டத்தில் திங்கள்கிழமை நடைபெறும் பிளஸ் 2 தோ்வை 37 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத்தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 26 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் 153 தோ்வு மையங்களில் நடைபெறும் பிளஸ் 2 பொதுத்தோ்வை 36 ஆயிரத்து 713 மாணவ, மாணவிகளும், 829 தனித்தோ்வா்களும் என மொத்தம் 37 ஆயிரத்து 542 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.

அதன் தொடா்ச்சியாக பிளஸ் 2 பொதுத் தோ்விற்கான முன்னேற்பாடு பணிகளில் கல்வித் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாா்கள். மேலும், மாவட்டம் முழுவதும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் சுமாா் 1,600 முதுநிலை பட்டதாரி ஆசிரியா்களுக்கு பிளஸ் 2 தோ்வு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியா்களின் விருப்பத்தின் பேரில் ஆசிரியா்கள் பணிபுரியும் பள்ளியில் இருந்து 15 கிலோ மீட்டா் தொலைவிற்குள் தோ்வு பணி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் பிளஸ் 2 தோ்வில் ஆள் மாறாட்டம், காப்பி அடிப்பதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்டத்தில் பிளஸ் 2 தோ்வு நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாா் நிலையில் இருப்பதாகவும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.