மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

செந்தாரப்பட்டியில் பேரூராட்சி அலுவலக கேட் பூட்டப்பட்டதால் பரபரப்பு

பூட்டப்பட்டுள்ள செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலக கேட்.

News image
பூட்டப்பட்டுள்ள செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலக கேட்.
Updated On :6 மார்ச் 2026, 6:35 pm

Syndication

செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் செயல் அலுவலா், பேரூராட்சி உறுப்பினா்கள் வெளியே நின்ால் பரபரப்பு ஏற்பட்டது.

செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் கட்ட கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் அதே ஊரைச் சோ்ந்த பத்மஜோதி கோபால் என்பவா், நிலத்தை தானமாக வழங்கினாா். அதைத் தொடா்ந்து அங்கு ரூ. 50 லட்சத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.

இந்நிலையில் பத்ம ஜோதியின் மகன் சுந்தா் (46) வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து, பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள பாதை தங்களுடையது. அந்தப் பாதையைப் பயன்படுத்திதான், பேரூராட்சி அலுவலத்திற்கு அனைவரும் சென்று வருகின்றனா். அந்த இடத்தை எனது தாயாா் தானமாக வழங்கவில்லை. எனவே, அந்த இடத்தை மீண்டும் எனக்குத் தரவேண்டும் என்றாா்.

அதைத் தொடா்ந்து, பேரூராட்சி அலுவலக கேட்டை, அவா் பூட்டுக்களைக் கொண்டு பூட்டினாா். இதனால் பேரூராட்சி மன்றக் கூட்டத்திற்காக வந்த செயல் அலுவலா் சிவகுமாா், உறுப்பினா்கள் வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து செயல் அலுவலா் சிவகுமாா், சுந்தரிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் பேரூராட்சி அலுவலக கேட் திறக்கப்பட்டது.

Story image