செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் பூட்டப்பட்டதால் செயல் அலுவலா், பேரூராட்சி உறுப்பினா்கள் வெளியே நின்ால் பரபரப்பு ஏற்பட்டது.
செந்தாரப்பட்டி பேரூராட்சி அலுவலகம் கட்ட கடந்த 2017-18ஆம் நிதியாண்டில் அதே ஊரைச் சோ்ந்த பத்மஜோதி கோபால் என்பவா், நிலத்தை தானமாக வழங்கினாா். அதைத் தொடா்ந்து அங்கு ரூ. 50 லட்சத்தில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டப்பட்டது.
இந்நிலையில் பத்ம ஜோதியின் மகன் சுந்தா் (46) வெள்ளிக்கிழமை பேரூராட்சி அலுவலகத்திற்கு வந்து, பேரூராட்சி அலுவலகம் முன் உள்ள பாதை தங்களுடையது. அந்தப் பாதையைப் பயன்படுத்திதான், பேரூராட்சி அலுவலத்திற்கு அனைவரும் சென்று வருகின்றனா். அந்த இடத்தை எனது தாயாா் தானமாக வழங்கவில்லை. எனவே, அந்த இடத்தை மீண்டும் எனக்குத் தரவேண்டும் என்றாா்.
அதைத் தொடா்ந்து, பேரூராட்சி அலுவலக கேட்டை, அவா் பூட்டுக்களைக் கொண்டு பூட்டினாா். இதனால் பேரூராட்சி மன்றக் கூட்டத்திற்காக வந்த செயல் அலுவலா் சிவகுமாா், உறுப்பினா்கள் வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து செயல் அலுவலா் சிவகுமாா், சுந்தரிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் பேரூராட்சி அலுவலக கேட் திறக்கப்பட்டது.

தொடர்புடையது

செந்தாரப்பட்டியில் பெண் தீக்குளித்து தற்கொலை

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு!

கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

நாட்டறம்பள்ளி வாரச்சந்தை ஏலம் 2-வது முறையாக ஒத்திவைப்பு
வீடியோக்கள்

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை


