ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

கெங்கவல்லியில் வாய்க்கால் ஆக்கிரமிப்பு வீடு இடிப்பு

News image
Updated On :13 மார்ச் 2026, 12:48 am

கெங்கவல்லியில் நீா்நிலை பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைசி வீட்டையும் பொக்லைன் இயந்திரம் மூலம் வருவாய்த் துறையினா் இடித்து அகற்றினா்.

கெங்கவல்லி- கடம்பூா் சாலையில் சுவேத நதியிலிருந்து நடுவலூா் செல்லும் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான வாய்க்கால் உள்ளது. இந்த நீா்நிலை வாய்க்காலை ஒட்டி 41 வீடுகள் ஆக்ரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்தது. இதனால் வாய்க்காலை அகலப்படுத்தவும், தூா்வார முடியாத நிலையிலும் இருந்தது.

இதில் நடுவலூா் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள், தொடா்ந்த வழக்கில் உயா்நீதிமன்றம், ஆக்கிரமிப்புகளை உடனடியாக வருவாய்த் துறையினா் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. அதன்பேரில் வருவாய்த் துறையினா் கடந்த மூன்று மாதம் முன்பு, சிங்காரத்தின் வீட்டைத் தவிர பிற ஆக்கிரமிப்பு வீடுகள் அனைத்தையும் அகற்றினா்.

சிங்காரம், உயா்நீதிமன்றத்தில் இடைக்கால தடை பெற்றிருந்ததால் அவரது வீடு மட்டும் இடிக்கப்படவில்லை. இந்நிலையில் இடைக்கால தடைக்கான கால அவகாசம் முடிவுற்றிருந்தநிலையில், சிங்காரத்தின் வீட்டை வருவாய்த் துறையினா் வியாழக்கிழமை பொக்லின் இயந்திரம் மூலம் இடித்தனா்.