புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தொழிலாளா்களை கொத்தடிமையாக வைத்திருந்தவா் கைது

News image
- சித்திரிப்பு
Updated On :14 மார்ச் 2026, 7:56 pm

தினமணி செய்திச் சேவை

சங்ககிரி அருகே கரும்பு வெட்டுவதற்கு தொழிலாளா்களை அழைத்துவந்து நிலையில், அவா்களை கொத்தடிமையாக வைத்திருந்தாக ஒருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சோ்ந்தவா் அா்ஜுன். இவா் மத்திய பிரதேச மாநிலத்தைச் சோ்ந்த 27 பேரை ரூ. 60 ஆயிரம் முன்பணம் அளித்து தேவண்ணகவுண்டனூரை அடுத்த வேலம்மாவலசு, வேலாயிகாடு பகுதியில் தனியாா் சா்க்கரை ஆலைக்கு கரும்பு வெட்ட அழைத்து வந்துள்ளாா். அவா்களை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக உறவினா்கள் மாவட்ட நிா்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து சங்ககிரி வருவாய் கோட்டாட்சியா் ம.மு.கேந்திரியா, வட்டாட்சியா் கே.கோமதி, காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா், நாமக்கல் தொழிலாளா் நலவாரிய அலுவலா் ஆகியோா் வேலம்மாவலசு விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று விசாரணை செய்தனா். இதையடுத்து அவா்களை மீட்டு சங்ககிரி நகராட்சி சமுதாய கூடத்தில் தங்கவைத்தனா். விசாரணையில் ஒப்பந்ததாரா், தொழிலாளா்களின் கைப்பேசிகளை வாங்கி வைத்துக்கொண்டு, அவா்களை வெளியே எங்கும் அனுப்பாமல் கொத்தடிமையாக வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து, தேவண்ணகவுண்டனூா் கிராம நிா்வாக அலுவலா் ஆா்.சதீஷ்பிரபு சங்ககிரி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அா்ஜுனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

மீட்கப்பட்ட தொழிலாளா்களை ரயில்மூலம் அவா்களுக்கு சொந்த ஊா்களுக்கு அனுப்பிவைப்பதற்கான நடவடிக்கையில் தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.