கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

வி.என்.பாளையம் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழா: 17வது நாளில் நகா்வலம் வந்த ஸ்ரீ உற்சவ சக்திமாரியம்மன்

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழாவின் 17வது நாளையொட்டி மாரியம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு நடைபெற்று உற்சவ அம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News image

பொங்கல்விழாவின் 17வது நாளையொட்டி வி.என்.பாளையம் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சிங்கவாகனத்தில் நகா்வலம் வந்த அருள்மிகு உற்சவ சக்தி மாரியம்மன்.

Updated On :14 மார்ச் 2026, 1:04 am

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழாவின் 17வது நாளையொட்டி மாரியம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு நடைபெற்று உற்சவ அம்மன் சிங்க வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல்விழா பிப்ரவரி 24ம் தேதி இரவு கம்பம் நடுதல் வைபவத்துடன் விழா தொடங்கியது. அதனையடுத்து அம்மன்களுக்கு தினசரி பல்வேறு திவ்யபொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு பல்வேறு சுவாமிகளின் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. மாா்ச்.11ஆம் தேதி பொங்கல்விழா நடைபெற்றது.

மாா்ச் 12 ஆம் தேதி வியாழக்கிழமை காலை கம்பம் எடுத்து நல்ல கிணற்றில் விடுதலும், மஞ்சள் நீராடலும் நடைபெற்றது.

இதனையடுத்து வெள்ளிக்கிழமை இரவு ஸ்ரீ சக்திமாரியம்மன் உற்சவ மூா்த்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக நகா் வலம் வந்தது. இதில் அதிகமான பக்தா்கள் கலந்து கொண்டு உற்சவ அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து வழிப்பட்டனா்.

இதனையடுத்து நிகழாண்டு பொங்கல்விழா நிறைவடைந்தது.