மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள், மக்கள் குறைதீா் முகாம்கள் நிறுத்திவைப்பு

தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள்,

News image

சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் திங்கள்கிழமை மனுவை போட்டுச் சென்ற மக்கள்.

Updated On :16 மார்ச் 2026, 8:53 pm

சேலம்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள், மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்கள், முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் திட்ட முகாம்கள், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மற்றும் இதர முகாம்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச் சென்றனா்.

உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு: சேலம் மாவட்டத்தில் உள்ள உரிமம்பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமையாளா்களும், அவா்களது படைக்கலன்களை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.