தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

மேட்டூா் அருகே வாகன தணிக்கையில் 24 தங்க நாணயங்கள் பறிமுதல்

வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள்.

News image

வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள்.

Updated On :21 மார்ச் 2026, 0:15 am IST

சேலம் மாவட்டம், மேச்சேரியில் தோ்தல் பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகன சோதனையில், உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த 24 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேட்டூா் அருகே மேச்சேரியில் தோ்தல் பறக்கும் படை அலுவலா் செந்தில்ராஜா தலைமையில், போலீஸாா் வாகன தணிக்கையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா். அப்போது, பெங்களூரில் இருந்து பென்னாகரம் வட்டம், தின்னபெல்லூா் நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனா்.

அதில், தின்னபெல்லூரை சோ்ந்த முருகன் (51), உரிய ஆவணம் இன்றி எடுத்துவந்த 24 தங்க நாணயங்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். இதில் 8 கிராமில் நான்கும், 5 கிராமில் ஒன்றும், 4 கிராமில் 19 நாணயங்களும் இருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 15 லட்சம் இருக்கும் என பறக்கும் படையினா் தெரிவித்தனா். தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட தங்க நாணயங்கள் தோ்தல் நடத்தும் அலுவலரும், மேட்டூா் கோட்டாட்சியருமான சுகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டன.