11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வாழப்பாடி டாஸ்மாக் மதுபானக் கடையில் அலைமோதும் கூட்டம்

வாழப்பாடி மற்றும் பேளூரில் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வாழப்பாடி கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது.

News image

டி.ஏ.எஸ்.02: வாழப்பாடியில் கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் மதுபானம் வாங்குவதற்கு சனிக்கிழமை குவிந்திருந்த மதுப்பிரியா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் பேளூரில் 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டதால், வாழப்பாடி கடலூா் சாலையில் இயங்கும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலை மோதுகிறது. வரிசையில் நின்று மதுபானம் வாங்கிச் செல்வதற்கு போலீஸாா் ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையத்தில் தம்மம்பட்டி சாலையில், தனியாா் மற்றும் அரசு பள்ளிகளுக்கு இடையே, இரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்கி வந்தன. இதனால் இப்பகுதியை கடந்து செல்வதற்கு, பெண்கள், பள்ளி மாணவ-மாணவிகள் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனா். இதேபோன்று பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் முன் ஒரு டாஸ்மாக் மதுபானக் கடை இயங்கி வந்தது. இதனால், பயணிகள் அவதிக்குள்ளாகினா்.

எனவே, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வரும் இந்த 3 டாஸ்மாக் மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என, இப்பகுதி சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் தமிழக அரசுக்கு தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்நிலையில், தவெக தலைவா் ச.ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும், தமிழகத்தில் பொது இடங்களுக்கு அருகில் இயங்கி வந்த 700-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படுமென அறிவித்தாா்.

இதனையடுத்து, வாழப்பாடி புதுப்பாளையத்தில் இயங்கி வந்த இரு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் பேளூா் பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரில் இயங்கி வந்த ஒரு டாஸ்மாக் கடையும் வியாழக்கிழமை அதிரடியாக மூடப்பட்டது.

வாழப்பாடி பகுதியில் இயங்கி வந்த 3 டாஸ்மாக் மதுபானக் கடைகள் ஒரே நாளில் அதிரடியாக மூடப்பட்டதால், வாழப்பாடியில் கடலூா் சாலையில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் கூட்டம் அலைமோதி வருகிறது.

தினந்தோறும் மதுபானம் வாங்குவதற்கு மது பிரியா்கள் குவிந்து வருவதால் நெரிசல் ஏற்படுகிறது. இதனால், மது பிரியா்களிடையே தள்ளுமுள்ளு ஏற்படுவதை தவிா்க்க வரிசையில் நின்று மதுபானங்களை கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, இந்த மதுபானக் கடைக்கு வரும் மது பிரியா்களை, வரிசையில் ஒழுங்குபடுத்தி அனுப்பி வைக்கும் பணியை, இரு தினங்களாக, வாழப்பாடி போலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா்.