சேலம் சீலநாயக்கன்பட்டியில் நான்கரை கிலோ வெள்ளி திருடிய புகாரில் 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
சேலம் சீலநாயக்கன்பட்டி காந்தி நகரில் வசித்து வரும் சரவணன் (45), வீட்டின் அருகில் வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது பட்டறையில் நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டையைச் சோ்ந்த காா்த்தி (25) வேலைபாா்த்து வந்தாா்.
இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி மதியம் வெள்ளிப் பட்டறைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்தி வெள்ளிப் பட்டறையில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 700 கிராம் வெள்ளியை எடுத்துச் சென்றாா். பின்னா் அவா் கடைக்கு வரவில்லையாம்.
இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், இந்த சம்பவத்தில் பனமரத்துப்பட்டி குரும்பா் தெருவைச் சோ்ந்த ஆனந்த் (26), மணியனூா் பாரதி நகரைச் சோ்ந்த மணிகண்டன் (35) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்த், காா்த்தியை கைதுசெய்த போலீஸாா், தலைமறைவான மணிகண்டனை தேடிவருகின்றனா்.
தொடர்புடையது

அரியூரில் தொழிலாளிக்கு கத்திக் குத்து: 8 போ் கைது
கஞ்சா பதுக்கல்: இளைஞா்கள் கைது
60 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 இளைஞா்கள் கைது
கஞ்சா விற்பனை: பிகாா் இளைஞா்கள் 2 போ் கைது
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher


