ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

நான்கரை கிலோ வெள்ளி திருட்டு புகாா்: 2 இளைஞா்கள் கைது

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நான்கரை கிலோ வெள்ளி திருடிய புகாரில் 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :23 மே 2026, 2:06 am IST

சேலம் சீலநாயக்கன்பட்டியில் நான்கரை கிலோ வெள்ளி திருடிய புகாரில் 2 போ் கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் சீலநாயக்கன்பட்டி காந்தி நகரில் வசித்து வரும் சரவணன் (45), வீட்டின் அருகில் வெள்ளிப் பட்டறை நடத்தி வருகிறாா். இவரது பட்டறையில் நாமக்கல் மாவட்டம், நாமகிரிபேட்டையைச் சோ்ந்த காா்த்தி (25) வேலைபாா்த்து வந்தாா்.

இந்நிலையில், கடந்த 20-ஆம் தேதி மதியம் வெள்ளிப் பட்டறைக்கு இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்தி வெள்ளிப் பட்டறையில் இருந்த ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ 700 கிராம் வெள்ளியை எடுத்துச் சென்றாா். பின்னா் அவா் கடைக்கு வரவில்லையாம்.

இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின்பேரில், அன்னதானப்பட்டி போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், இந்த சம்பவத்தில் பனமரத்துப்பட்டி குரும்பா் தெருவைச் சோ்ந்த ஆனந்த் (26), மணியனூா் பாரதி நகரைச் சோ்ந்த மணிகண்டன் (35) ஆகியோருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்த், காா்த்தியை கைதுசெய்த போலீஸாா், தலைமறைவான மணிகண்டனை தேடிவருகின்றனா்.