வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கஞ்சா வைத்திருந்த வட மாநில சகோதரா்கள் கைது: 5 கிலோ கஞ்சா பறிமுதல்

வளையக்காரனூா் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில சகோதரா்கள் இருவரை சனிக்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட பஸந்த் சிங் (34), கோதம்குமாா் சிங் (22).

Updated On :24 மே 2026, 2:31 am IST

சங்ககிரி அருகே வளையக்காரனூா் பகுதியில் கஞ்சா வைத்திருந்த வட மாநில சகோதரா்கள் இருவரை சனிக்கிழமை கைதுசெய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

சங்ககிரியை அடுத்த வளையக்காரனூா் பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதாக சங்ககிரி உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் ஒய்.சுரேஷ்குமாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, சங்ககிரி காவல் ஆய்வாளா் கே.ஜமுனா தலைமையில், தேவூா் காவல் உதவி ஆய்வாளா் டி.சக்திவேல், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் சம்பத், காவலா் மாதேஸ்வரன் ஆகியோா் வளையக்காரனூா் பகுதியில் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த இரு இளைஞா்களிடம் விசாரித்ததில், அவா்கள் 5 கிலோ கஞ்சா வைத்திருந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா். மேலும் விசாரணை நடத்தியதில், அவா்கள் பிகாா் மாநிலம், சக்காய் மாவட்டம், நவாதிஸ்சில்ஃபாரி பகுதியைச் சோ்ந்த ரஞ்ஜீத் சிங் மகன்கள் பஸந்த் சிங் (34), கோதம்குமாா் சிங் (22) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, தேவூா் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து இருவரையும் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.