பழனிச்சாமி என்பவர் கூறும்போது, இந்தப் புற்களை தரைப்பகுதிக்கு கொண்டு வந்து விற்கும்போது 10 ஈஞ்சிக்கட்டு அடங்கிய ஒரு பெரிய கட்டுக்கு ரூ.700 முதல் 900 வரைதான் கிடைக்கிறது. ஒருதடவை மேலே ஏறி இறங்கினால் சுமார் 100 பெரிய கட்டு சேகரிக்கலாம். ஒருவாரம் சாப்பாடு, போக்குவரத்து எனப் பார்த்தால் எங்களுக்கு சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் கிடைக்கிறது. மாதம் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் கிடைக்கும். இது மிகவும் சொற்பமான வருவாய். இதனை ஆண்டு முழுவதும் அறுக்க முடியாது. 4 அல்லது 5 மாதம் தான் கிடைக்கும். மீதி நாள் தேன், கிழங்கு, கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைப் பறித்து விற்கிறோம். அதுவும் போதிய விற்பனை இல்லாத நிலை உள்ளது. ஆகவே மலைவாழ் மக்கள் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.